அங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. தகவல்கள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

சனி, 18 ஜூன், 2011

பாண்டதிர்க்குள் பாண்டம் - இயற்கை குளிரூட்டி


கிராமத்தினரின் வாழ்க்கை தரத்தை எளிமையான மற்றும் சிக்கனமான  முறையில் வழிவகுத்திட முயன்று வரும் அனைத்து உலகத்து உள்ளங்களுக்கும் எமது நன்றிகள்.

எளிமையாக கிடைக்கும் பொருட்கள் கொண்டு மின்சாரம் இல்லாமல் குளிரூட்டி செய்வது எப்படி என்பது பற்றியே இந்த தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் தற்போது கிராமத்தினர்களின்  பயன்பாட்டிலும் இருக்கலாம்.

தகவல் பதிவாளர்: சுரேஷ் 
கிரம்த்த்தினரின் எந்த பிரச்சனையை இந்த தொழில் நுட்பம் தீர்க்கும்:

மின்சாரம் மூலம் அதிக செலவில் பயன்படுத்தகூடிய குளிரூட்டியை நீக்கி இயற்கையான குளிரூட்டிகள். தற்போது இவை குடிதண்ணீர் செமிப்பியாகவும் கிராமத்தில் பயன்படுத்தபடுகிறது.

தண்ணீர் மட்டுமல்லாது காய்கறி கனிகளை எவ்வாறு வீணாகாமல் சேமித்து வைப்பது என்பது பற்றிய தொழில்நுட்பம்.

கண்டுபிடிப்பாளர்: முஹம்மது பாஹ் அப்பா, நைஜீரியா

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏதும் முன்னெச்செரிக்கை(இருந்தால்): 

இந்த தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிரமங்களுக்கும் நட்டங்களுக்கும் இணையதளமோ அல்லது அதன் கண்டு பிடிப்பாளர்களோ பொறுப்பாக மாட்டார்கள்.

விரிவான விளக்கம்:

இதன் ஆங்கில சுட்டி: https://www.planetseed.com/node/20642

இந்த குளிரூட்டி செய்முறை:
இரண்டு மண் பாண்டங்களை ஒன்று முதல் மூன்று சென்டிமீட்டர் இடைவெளியில் எடுத்துகொள்ளவும். மண் பாண்டாங்களில் கீழே ஓட்டைகள் இருப்பினும் அவைகளை உளை கொண்டு அடைத்துவிடுங்கள். இவை தண்ணீர் மற்றும் மணல் கசிவதை தடுக்க உதவும்.  பெரிய மண் பாண்டத்தில் அடியில் மணலை நிரப்பிகொள்ளவும்.


நிரப்பிய மணல் இரண்டு மண் பாண்டங்களின் வாய் ஒரே அளவில் இருக்கும் அளவிற்கு மணலை நிரப்பவும்.


பிறகு சிறிய மண் பாண்டத்தை நடு பகுதியில் (அனைத்து பக்கங்களிலும் இரண்டு பாண்டங்களின் இடைவெளியின் தூரம் ஒரே அளவில் இருக்க வேண்டும்) எடுத்து வைத்து அந்த இடைவெளியில் மணலை நிரப்பவும்.

நிரப்பிய மணலில் தண்ணீரை ஊற்றவும். தண்ணீர் வெளியே வராத அளவிற்கு நீரை நிரப்பவும். காசாங்காடு கிராமத்தில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் இந்த மணலில் உள்ள ஈரப்பதம் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை தாங்கும்.

மணலுக்கு பதிலாக தேங்காய் மட்டை சோற்றை கொண்டு செய்து பார்க்கவும். தேங்காய் மட்டை சோறு தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளும் திறன் அதிகம். ஆனால் இவை எளிதில் மடித்து விடும் வாய்ப்புகள் உண்டு.


பழம் அல்லது காய்கறிகளை உள்வைத்து ஈர துணியால் மூடவும். 

இயற்க்கை குளிரூட்டி தாங்களின் பயன்பாட்டிற்கு தயார்.



சுமார் 27 நாட்கள் வரை காய்கறி மற்றும் கனிகள் கெடாமல் இருக்க இந்த குளிரூட்டிகள் உதவி புரியும்.

கிராம குழும விவாத சுட்டி: http://groups.google.com/group/kasangaducom/browse_thread/thread/a93cfb178c221f8f